Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு கட்சியின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை: பீகாரில் பரபரப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (19:58 IST)
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
வைஷாலி மாவட்டம் தாட்நகரில் வசித்து வந்தவர் ஷிவ்ஜி ராய் (வயது 45). ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பிரமுகரான இவர், தாட்நகர் கிராம பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருந்தார். நேற்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 
இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், கொலையாளிகளை தேடி வருவதாகவும் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

Show comments