Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித் ஷா, சோனியா காந்தி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது மத்திய தகவல் ஆணையம்

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2014 (11:25 IST)
தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டதாகக் கூறி பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், அதற்கு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, தகவல் ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் சுபாஸ் அகர்வால் தகவல் ஆணையத்திடம் புகார் அளித்ததை அடுத்து, இது குறித்து பதிலளிக்குமாறு 6 கட்சிகளுக்கும் தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கும் சில கட்சிகள் பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து, தகவல் ஆணையம் தற்போது மீண்டும் இக்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்படி, பதில் அளிக்காவிட்டால், எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் தகவல் ஆணையத்துக்கு உள்ளது என்று இந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments