Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர்களில் இனி தேசிய கீதம் கட்டாயம் இல்லை: மத்திய அரசு

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (06:02 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த சமயத்தில் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் கொடுத்தது

இந்த நிலையில் தற்போது திடீரென தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் அமைச்சர் குழு திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்புவது குறித்து புதிய வழிமுறைகளை வகுக்கும் வரை தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று  கூறியுள்ளது. எனவே இனிமேல் திரையரங்குகளில் தேசிய கீதம் திரையிடப்படுவது நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments