Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் வீடுகள்" அதலபாதாளத்தில் ரியல் எஸ்டேட் துறை

Webdunia
வியாழன், 14 மே 2020 (08:37 IST)
real estate
சென்னை உள்பட பெருநகரங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் துறை ஜோராக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் வீடுகளின் விலைகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ரியல் எஸ்டேட் துறை அதள பாதாளத்தில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது 
 
பொதுமக்களிடம் கையில் காசு இல்லாததால் சொந்த வீடுகளை விற்க பலர் முயன்று வருவதாகவும் ஆனால் இந்த அவசரத்தை பயன்படுத்திய ரியல் எஸ்டேட் துறையினர் வீடுகளை 20 முதல் 40 சதவீதம் குறைத்து கேட்பதாகவும் அதற்கு சம்மதம் தெரிவித்து சிலர் வீடுகளை விற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் 20% முதல் 40 சதவீதத்தை குறைத்து வாங்கிய வீடுகளை கூட விற்க முடியாமல் ரியல் எஸ்டேட் துறையினர் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது வீடு வாங்கும் திறன் கொண்ட பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகவும், தற்போது பொதுமக்கள் யாரிடமும் காசு இல்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
எனவே வீடுகளை அடிமாட்டு விலைக்கு விற்பது, புதிதாக வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவருவது ஆகியவற்றால் ரியல் எஸ்டேட் துறை அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments