Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தனியார் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை: வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியுமா?

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (10:11 IST)
சமீபத்தில் மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் தற்போது இதேபோல் பெங்களூரை சேர்ந்த ஒரு தனியார் வங்கிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அந்த வங்கியின் பெயர் ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி
 

இந்த வங்கியின் பணபரிவர்த்தனை செயல்பாடுகளுக்கு தடை விதித்த இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கி புதிதாக கடன் கொடுக்கவும், அதேபோல் டெபாசிட்டுகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தினமும் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments