Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு..!

Siva
வியாழன், 10 அக்டோபர் 2024 (08:13 IST)
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதி சடங்கு நடத்தப்படும் என்றும் ரத்தன் தாத்தாவின் உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்தன் தாத்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மகாராஷ்டிரா மாநில அரசு செய்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் இந்திய தொழில் துறையின் உண்மையான டைட்டன், பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கம் என்று தெரிவித்துள்ளார்

Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: மோடி, சுந்தர் பிச்சை உள்பட பிரபலங்கள் இரங்கல்..!

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

தேர்தலில் தோற்ற பிறகு புதினுடன் ரகசியமாக பேசினாரா டிரம்ப்? அதிர்ச்சி தகவல்

ஆசிரியர்களுக்கு இன்று சம்பளம் விடுவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த விசிக: மது ஒழிப்பு மாநாடு குறித்து திண்டுக்கல் சீனிவாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments