Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் விவகாரம் -லோக் ஜன் சக்தி கட்சி தொடர்பு இல்லை: ராம்விலாஸ் பஸ்வான்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2016 (22:44 IST)
பெங்களூரு - உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பின் படி  மத்திய அரசு நடவடிக் கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை மேற் கொள்வோம் என்று விஷ்வ இந்த பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், பெங்களூருவில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ராமர் கோவில், பாபர் மசூதி போன்ற விவகாரங்களை மையப்படுத்தி பிரதமர் மோடி அரசியல் செய்வது இல்லை. சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மோடி தலையிடுவதும்  இல்லை. பிரதமர் மோடியின் அரசியல் மேடை மிகவும் நாகரீகம் கொண்டது.
 
ராமர் கோவில் விவகாரத்தில், லோக் ஜன் சக்தி கட்சிக்கு  எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் என்.டி ஏ. கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி செயல்படும் என்றார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments