Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வது நாளாக தொடரும் அமளி; திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (12:11 IST)
எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் ராஜ்யசபா வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரிய அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்று தெலுங்கு தேச எம்.பி.க்களும் கடந்த 14 நாட்களாக ராஜ்யசபாவில் அவை நடக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில் 15 வது நாளான இன்றும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அவை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.  தெலுங்கு தேசம் எம்.பிக்கள் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து ராஜ்யசபா திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்று வெங்கையா நாயுடு அறிவித்து அவையை ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments