Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு! – குஜராத்தில் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (08:40 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குஜராத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு செல்போன் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டு அலைகள் தீவிரமாக பரவிய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை இந்தியா முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மேலாக செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பல மாநிலங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாவது டோஸ் போடுவதை ஊக்குவிக்க இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? திருப்பதி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

திருமண வீட்டில் உணவில் விஷம் கலந்து மணமகளின் தாய் மாமா.. அதிர்ச்சி தகவல்..!

எடப்பாடி பழனிசாமி உறவினர் வீட்டில் தொடரும் சோதனை.. 3 வது நாளாக பரபரப்பு..!

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலி.. தமிழக முதல்வர் இரங்கல்..!

செங்கோட்டை- மயிலாடுதுறை உள்பட 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே

அடுத்த கட்டுரையில்
Show comments