Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணைக் கற்பழித்து கிணற்றில் தள்ளிய காமக் கொடூரன்

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (18:14 IST)
ராஜஸ்தானில் 17 வயது இளம் பெண்ணைக் கற்பழித்து கடுமையாகத் தாக்கிய மர்மநபர் ஒருவர், அந்தப் பெண்ணைக் கொலை செய்ய எண்ணி கிணற்றில் தள்ளியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்குச் சென்றார். மாலையில், வேலை முடிந்து அவர் வீடு திரும்புபோது வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார்.

காட்டுப் பகுதியில் மறைவிடத்தில் அந்த பெண்ணை அவர் கொடூரமாகக் கற்பழித்தார். பிறகு அந்த பெண்ணை கொலை செய்ய அந்த நபர் முடிவு செய்தார்.

எனவே, அந்த பெண்ணை பலமாக தாக்கி இழுத்து சென்றார். வயல் வெளியில் இருந்த பெரிய கிணற்றுக்குள் அந்த பெண்ணை தள்ளி விட்டு ஓடி விட்டார்.

கிணற்றுக்குள் விழுந்த அந்த பெண் உதவி கோரி கதறி கூச்சலிட்டுள்ளார். ஆனால் அப்போது பலத்த மழை பெய்ததால் அந்தப் பெண்ணின் குரல் வெளியில் கேட்கவில்லை.

இரவு முழுவதும் அந்தப் பெண் கிணற்றுக்குள் இருந்த பம்பு செட் குழாயைப் பிடித்தபடி போராடியுள்ளார். காலையில்தான் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு விவசாயிகள் ஓடி வந்து மீட்டனர்.

சுமார் 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்கதப் பெண்ணைக் கற்பழித்து கொல்ல முயன்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments