Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்.. ராகுல் ஆவேசம்

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (12:20 IST)
நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக எம்.பி. பிரக்யாசிங் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி “நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க நாள்” என கூறியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பிரக்யா சிங், “நாதுராம் கோட்ஷே ஒரு தேச பக்தர்” என கூறினார். இதனை தொடர்ந்து அவரின் பேச்சுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து பிரக்யா சிங் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை தேச பக்தர் என் கூறுகிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இது ஒரு துக்ககரமான நாள்” என கூறியுள்ளார்.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேச பக்தர் என பிரக்யா சிங் முன்னதாக பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மாநில பட்டியலுக்குள் கல்வி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டிடங்கள்! - மக்கள் பீதி!

பகுஜன் சமாஜ் கட்சி பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்: தலைவர் அதிரடி நடவடிக்கை..!

வாடகைக்கு எடுக்கப்படும் ஆம்னி பேருந்துகள்: தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்..!

கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக்.. ஓசூரில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments