இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது கட்டம்: குஜராத் முதல் மேகாலயா வரை தொடங்கும் ராகுல் காந்தி..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:53 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். முதல் கட்ட யாத்திரையை அவர் கன்னியாகுமரியில் தொடங்கி  காஷ்மீரில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை அவர் தொடங்க உள்ளார். இந்த யாத்திரையை குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
செப்டம்பர் 7ஆம் தேதி  இரண்டாம் கட்ட யாத்திரை எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைமை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே முதல் கட்டாக யாத்திரை மிகப் பெரிய பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments