Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘எனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக கருதுகிறேன்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (13:25 IST)
எனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக கருதுகிறேன் என அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் சென்றுள்ள நிலையில் நேற்று தொழிலதிபர்களின் மத்தியில் பேசினார். அப்போது எனது போன் ஒட்டு கேட்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன் என்றும் ஒரு தேசத்திற்கான தனி நபர்களுக்கான தனி உரிமை குறித்த கொள்கைகளை மத்திய அரசு நிறுவ வேண்டும் என்றும் கூறினார் 
 
ஒரு நாட்டின் அரசு உங்களுடைய போனை ஒட்டு கேட்க விரும்பினால் யாரும் உங்களை தடுக்க முடியாது, இது என்னுடைய எண்ணம், ஒரு நாடு உங்கள் போனை ஒட்டு கேட்க விரும்பும்போது அது சண்டையிடுவதற்கான சரியான களம் இல்லை என்றும் அவர் கூறினார். 
 
நான் என்னென்ன வேலைகள் செய்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள அரசு விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார். தனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக இந்தியாவில் கூறாமல் அமெரிக்காவில் ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments