வாரணாசியில் மோடியை எளிதில் தோற்கடித்திருக்கலாம்.. மிஸ் செய்துவிட்டோம்: ராகுல் காந்தி

Mahendran
புதன், 12 ஜூன் 2024 (14:05 IST)
வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அவர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என்று கூறப்படும் நிலையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை நாங்கள் போட்டியிட வைத்திருந்தால் எளிதில் அவரை தோற்கடித்திருப்போம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொது தேர்தல் முடிந்த பின்னர் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ’வாரணாசி தொகுதிகள் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் அவர் நரேந்திர மோடியை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பார் என்றும் நாங்கள் மிஸ் செய்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
 வாரணாசி தொகுதியில் மட்டும் எனது சகோதரி போட்டியிட்டு இருந்தால் பிரதமர் மோடி இரண்டு அல்லது மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார் 
 
அனேகமாக வாரணாசி தொகுதியில் மீண்டும் 2029 ஆம் ஆண்டு பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments