Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோர்பி விபத்துக்கு காரணமானவர்கள் பாஜகவுடன் தொடர்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:25 IST)
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் மோர்பி என்ற பாலம் உடைந்து பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் பாஜகவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் அவர்கள் எந்தவித தண்டனையும் பெறாமல் தப்பித்து விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜ்கோட்டில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூறிய ராகுல் காந்தி மோர்பி தொங்கு பாலத்தில் தொடர்புடையவர்கள் பாஜக மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதால்தான் எந்தவித நடவடிக்கை எடுக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்
 
மேலும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments