Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வார்த்தைகளால் பதிவு: முடக்கப்பட்ட ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம்!

ஆபாச வார்த்தைகளால் பதிவு: முடக்கப்பட்ட ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (09:22 IST)
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஆபாச வார்த்தைகளால் பதிவிடப்பட்டது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் Office of RG என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த டுவிட்டர் பக்கத்தை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கி அத்துமீறி ஊடுருவிய மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்.


 
 
5 நிமிடங்களில் இந்த டுவிட்டர் பக்கத்தில் 8 பதிவுகள் பதிவிடப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டு அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்பட்டது.
 
திடீரென முடக்கப்பட்ட ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் பின்னர் சரி செய்யப்பட்டது. இருப்பினும் அந்த ஆபாச பதிவுகள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments