Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடி கணக்கில் வருமானம்; என்ன செஞ்சீங்க? – ராகுல்காந்தி கேள்வி!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (17:09 IST)
கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு பெற்ற வருமானம் குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து ரூ.100 ஐ தாண்டிய நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.1000த்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் ரூ.23 லட்சம் கோடி மத்திய அரசு வருமானம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு கிடைத்த அந்த பணம் எங்கே சென்றது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “கடந்த 15 நாட்களில் எரிவாயு உருளை விலை சுமார் 50 ரூபாய் உயர்த்துள்ளது. குறிப்பாக 2021ல் மட்டும் சிலிண்டர் 190 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இதுவரை என்ன முன்னேற்றத்தை மோடி அரசு கண்டுள்ளது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments