Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணி உடைய ராகுல் காந்தியின் யாத்திரை தான் காரணமா? பரபரப்பு தகவல்..!

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (15:38 IST)
ராகுல் காந்தியின் பாதயாத்திரை காரணமாகத்தான் இந்தியா கூட்டணி உடைந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தியின் பாதயாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த யாத்திரை காரணமாக மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரிக்கும் என்று எண்ணப்பட்டது. 
 
குறிப்பாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மமதா பானர்ஜி கருதினார். எனவேதான் அவர் முதல் நபராக  காங்கிரஸ் கட்சிக்கு சீட்டு ஒதுக்க முடியாது என்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். 
 
இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே காரணத்திற்காக தான் தனித்து போட்டி என அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நிதிஷ்குமார் வெளியேறிய நிலையில் இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடைந்து விட்டது. எனவே ராகுல் காந்தியின் பாதயாத்திரை தான் இந்தியா கூட்டணீ  உடைய காரணம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments