Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்க்கட்சியாக காங்கிரஸ் சிறப்பாக செயலபட்டுள்ளது – ராகுல் காந்தி நிறைவு உரை !

Webdunia
வெள்ளி, 17 மே 2019 (19:17 IST)
இன்றோடு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து ராகுல் காந்தி தனது நிறைவு உரையை உத்தரபிரதேசத்தில் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிப்வு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 21 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்றோடு முடிகிறது.

இதையடுத்து தேசியத் தலைவர்கள் தங்கள் நிறைவு உரையை இன்று நிகழ்த்தினர். பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதையடுத்து உத்தரபிரதேசத்தில் இன்று தனது பிரச்சார உரையை ராகுல் காந்தி நிகழ்த்தி முடித்தார்.

அவரது பேச்சில் ‘ கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தனது பணியை சிறப்பாக செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே நமது முதல் இலக்கு. மோடியின் பிரச்சாரத்துக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் தேர்தலை திட்டமிட்டு நடத்தியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments