Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதியின் கார் மோதிய சிசிடிவி காட்சி

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (09:14 IST)
நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென எதிரே வந்த பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது., இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப்  வீரர்கள் 44 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலால் நாடே அதிர்ச்சி அடைந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளதோடு, பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்து வருகின்றது. மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை செய்த அமைச்சரவை பதில் தாக்குதலுக்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டுகளுடன் கூடிய கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கார் மோதிய வேகத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடந்த அதிர்ச்சி காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments