Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல்வாதிகளுக்குதான் முதல் தடுப்பூசி! – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:08 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முதலில் அரசியல்வாதிகளுக்கு செலுத்த வேண்டுமென புதுச்சேரி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் அவசர உபயோகத்திற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மக்களுக்கு செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் போபாலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபர் இறந்ததாக வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுந்தியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்படுவதால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர மாட்டார்கள் என்றும், அதனால் மக்கள் நம்பிக்கையை பெற முதலில் அரசியல்வாதிகளுக்கு இந்த மருந்தை செலுத்த வேண்டும் என்றும் கொரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments