Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-49: சிவன் பெருமிதம்

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (15:48 IST)
பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்ணில் இன்று 3.02க்கு செலுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் திடீரென வானிலை காரணமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் என தகவல் வெளிவந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் 10 நிமிடங்கள் தாமதமாக 3.12க்கு சரியாக ஏவப்பட்டது. 
 
இந்த நிலையில் 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது என அதிகாரபூர்வமாக சற்றுமுன் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
 
கொரோனா காலத்திற்கு பிறகு செயல்படுத்திய திட்டம் வெற்றியை தந்துள்ளது என்றும், பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும்,  இஓஎஸ்-01 நிலைநிறுத்தப்பட்ட நிலையில் மற்ற செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன என்றும் சிவன் தெரிவித்தார்.
 
பிஎஸ்எல்வி சி-49 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டதற்கு  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments