Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிர அரசியலில் களம் இறங்குகிறார் பிரியங்கா காந்தி

தீவிர அரசியலில் களம் இறங்குகிறார் பிரியங்கா காந்தி

தீவிர அரசியலில் களம் இறங்குகிறார் பிரியங்கா காந்தி
, திங்கள், 4 ஜூலை 2016 (21:53 IST)
தீவிர அரசியல் களத்தில் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி குதிக்க உள்ளார்.
 

 
காங்கிரஸ் கட்சியில் பவர்புல் பதவியான துணைத் தலைவர் பதவியில் ராகுல் காந்தி நீண்ட காலமாக இருந்தாலும், அரசியலில் பிரதமர் நரேந்திர மோடி அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை.
 
பாஜக மேலும் வலுவடைவதோடு மோடியின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை தடுக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
 
இதனையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதனால், உத்திர பிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பிரியங்கா காந்தி களம் காண்பார் என டெல்லி வட்டாரம் உறுதிபட கூறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொது சிவில் சட்டம்; குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானது : கருணாநிதி