Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : அவரின் தாய் மீட்பு

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (17:57 IST)
கேரளாவில் நடிகர் ப்ரித்விராஜின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அவரின் தாய் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  ஆசியாவின் மிகபெரிய அணையாக திகழும் இடுக்கி அணை, வரலாறு காணாத அளவு நிரம்பியது. 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையில் நீர் திறந்திவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  இந்த வெள்ளத்தால் இதுவரை 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
இந்நிலையில், கேரளாவில் கொச்சினில் உள்ள நடிகர் ப்ரித்விராஜின் வீடும் நீரில் மூழ்கியது. அந்த வீட்டில் அவரின் தாயும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் சிக்கிக் கொண்டார். எனவே, நான்கு பேர் சேர்ந்து அவரை ஒரு பெரிய பாத்திரத்தில் அமரவைத்து மீட்டு வந்தனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments