Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடையால் மருத்துவமனையில் 21 நோயாளிகள் பலி

மின் தடையால் மருத்துவமனையில் 21 நோயாளிகள் பலி

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (21:02 IST)
மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 21 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.


 
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காந்தி மருத்துவமனையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து பலமுறை மின்தடை ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டால் அதை சமாளிக்க 4 பெரிய ஜெனரேட்டர்கள் உள்ளன. ஆனால் மின்சாரம் விட்டுவிட்டு வந்ததால் என்ன காரணத்துக்காக மின்தடை ஏற்படுகிறது என்பதை கண்டு பிடிப்பதற்காக ஜெனரேட்டர்கள் இயக்கப்படவில்லை.

இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அறுவை சிகிச்சை பிரிவு சாதனங்கள், பிரசவ வார்டில் உள்ள சாதனங்கள், செயற்கை சுவாச சாதனங்கள், மருத்துவ சாதனங்கள், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள சாதனங்கள் செயல்படவில்லை. இதனால் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் 21 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments