Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த காவல் துறையினர்

Webdunia
சனி, 3 ஜனவரி 2015 (11:15 IST)
உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்ற 2 காவலர்துறையினர், நிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
உத்தரப் பிரதேச மாநிலம் பதுவன் மாவட்டம் முசாஜ்ஹக் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வெளியில் சென்றுள்ளார்.
 
அப்போது, முசாஜ்ஹக் காவல் நிலையத்தில் பணியாற்றும் வீர் பால் சிங் யாதவ், அவ்னிஷ் யாதவ் ஆகிய 2 கான்ஸ்டபிள்கள் காரில் வந்துள்ளனர். சிறுமியை அழைத்த அவர்கள் திடீரென காருக்குள் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர்.
 
காவல் நிலையத்துக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற அவர்கள், அங்குள்ள அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
பின்னர், அந்த சிறுமியை மீண்டும் காரில் அழைத்து வந்த கிராமத்தில் விட்டுச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
 
இது குறித்து அவரது தாய், காவல்துறையினரிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாலியல் பலாத்காரம் செய்த 2 கான்ஸ்டபிள்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதற்கிடையே, மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவின் பேரில், 2 கான்ஸ்டபிள்களும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குற்றவாளிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும், அவர்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!