Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (19:12 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின்போது சாலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். 
 
இதுகுறித்து ராகுல் காந்தி, இந்த அரசாங்கம் விவசாயிகளுடன் போரில் ஈடுப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments