Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (19:12 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர்களுக்கு அதிக விலை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின்போது சாலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில் காவல்துறையினருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். 
 
இதுகுறித்து ராகுல் காந்தி, இந்த அரசாங்கம் விவசாயிகளுடன் போரில் ஈடுப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளார்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments