Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா குறித்து உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:36 IST)
கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதீத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒருசில தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு அளவில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதனிடையே, கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுதல் செய்ய உள்ளார். பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாகவும் பிரதமர் கேட்டறிவார் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments