Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி.. இதற்கு முன் உரையாற்றிய பிரதமர்கள் யார் யார்?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (07:52 IST)
பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஏற்கனவே பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில் தற்போது உரையாற்றுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்செல் மண்டேலா ஆகிய வெகு சில உலக தலைவர்கள் மட்டுமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசியிருக்கும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அதுவும் இரண்டாவது முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு முன் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்மராவ், ராஜீவ் காந்தி ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்திய நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டத்தில் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, இந்திய அமெரிக்க நாடுகள் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments