Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் இந்த மாநிலம் தான் முதலிடம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (09:56 IST)
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே ஊழல் முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது தெலுங்கானா தான் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத் ராஷ்டிரிய சமைதி என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது என்பதும் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 9 ஆண்டுகளாக இந்த கட்சி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் ஊழல் அதிகமாகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாநில அரசை கடுமையாக சாடினார்
 
 ஊழல் முறைகேட்டில் தெலுங்கானாதான் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது என்றும் முதல்வர் கே சந்திரசேகர் ராவ் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் ஊழல் அதிகரித்திட்டது என்றும் குற்றம் காட்டினார். தெலுங்கானாவின் ஊழல் டெல்லி வரை பரவியுள்ளது என்றும் கேசிஆரின் முறைகேடுகளை மக்கள் கவனித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்.. என்ன காரணம்?

சென்னையில் அடுத்தடுத்து 7 இடங்களில் நகை பறிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

7வது நாளாக தொடர்ந்து உயர்ந்தது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

5 நாட்களில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments