Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கொரோனா தடுப்பூசி திருவிழா! – பிரதமர் சொன்ன 4 வலியுறுத்தல்கள்!

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (12:07 IST)
இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கான தடுப்பூசி திருவிழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முன்னதாக அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதலில் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வந்த நிலையில் பிறகு 45 வயதிற்கும் அதிகமானோருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்டது.

முன்னதாக மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இன்று டிகா உத்சவ் என்னும் தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மக்களுக்கு நான்கு வலியுறுத்தல்களையும் முன்வைத்துள்ளார். அவையாவன..

தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள். 

 கொரோனா சிகிச்சை பெறுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

முக கவசம் அணிந்து செல்லுங்கள்.  மற்றவர்களையும் அணியும்படி ஊக்கப்படுத்துங்கள். 

யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதியில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டல பகுதியை உருவாக்குங்கள்

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments