அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (09:35 IST)
இன்று நேதாஜியின் பிறந்தநாள் பாராக்கிரம தினமாக (Parakram Diwas) கொண்டாடப்படும் நிலையில் அந்தமான் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயர் சூட்டப்பட உள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23) பாராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று பராக்கிரம தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்திய நாட்டிற்காக போராடி இன்னுயிர் ஈந்த பரம்வீர் சக்ரா விருதை பெற்ற ராணுவ வீரர்களின் பெயரை அந்தமானை சுற்றியுள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு சூட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, கேப்டன் விக்ரம் பத்ரா, மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு இன்று பிரதமர் மோடியால் சூட்டப்படுகின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments