தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

Siva
வெள்ளி, 31 அக்டோபர் 2025 (09:08 IST)
பிஹாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேற்று  சாப்ராவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணிக்கு எதிராகப்பேசினார்.
 
வரலாறு காணாத தோல்வியை பிஹாரில் எதிர்க்கட்சிகள் சந்திக்கும் என்று கூறிய மோடி, பிஹார் மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
 
பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், உ.பி., பிஹார் மக்களை மாநிலத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என கூறியபோது, பிரியங்கா காந்தி கைதட்டி சந்தோஷப்பட்டதை கண்டித்தார். மேலும், கர்நாடகா, தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிஹார் மக்களை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
 
தமிழ்நாட்டில் உழைக்கும் பிஹார் மக்கள், திமுக-வால் துன்புறுத்தப்படுவதாகவும், ஆனால் ஆர்ஜேடி அமைதியாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிஹாரை அவமதித்த காங்கிரஸ் தலைவர்களை ஆர்ஜேடி பிரச்சாரத்துக்கு அழைப்பதாக அவர் விமர்சித்தார்.
 
ஒடிசா தேர்தலுக்கு பிறகு, மீண்டும் பிஹார் தேர்தலிலும் பிரதமர் தமிழகத்தை குறிப்பிட்டுப் பேசியது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments