Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்து அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும்! – பிரதமர் மோடி உரை!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (14:36 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்துள்ள நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருந்து கண்டிபிடிக்கும் பணிகள் உள்ளிட்ட சிலவற்றை குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ”கொரோனாவிற்கு எதிராக இந்தியா வலிமையுடன் போராடி வருகிறது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இலவச எரிவாயு, உணவு பொருட்கள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் ”இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை இந்தியா கண்டுபிடிப்பதிலும் அனைத்து நாடுகளுக்கும் வழங்குவதிலும் பெரும்பங்கு வகிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments