Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை பெரிதாக உயரவில்லை: முதல்வர் சர்ச்சை கருத்து!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (06:50 IST)
பெட்ரோல் விலை பெரிதாக உயரவில்லை என்றும் கச்சா எண்ணெயின் உயர்வை விட குறைவாகத்தான் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும் ஹரியானா மாநில முதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் வரிகள் காரணமாக தான் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் தமிழகத்திலும் ரூ.100ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஹரியானா முதல்வர்  லால் கட்டர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பெட்ரோல் விலை அவ்வளவாக உயரவில்லை என்றும் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் எரிபொருள் விலை 10 முதல் 15 சதவீதம் அதிகரித்து உள்ளதால் அதை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை உயர்வு குறைவுதான் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மேலும் பெட்ரோல் மீதான அதிக வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் ’வரிகள் அனைத்தும் மீண்டும் மக்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது என்றும் அதனால் மக்கள் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments