Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலைக் குறைவு – மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:29 IST)
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிகக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது. கிட்டத்தட்ட பெட்ரோல் விலை 90 ருபாயை நெருங்கியது. டீசல் விலை 85 ரூ வை நெருங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். இதனால் லாரிகளின் வாடகையும் உயர்ந்தது. இன்னும் சில அத்யாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. தற்போது எட்டு மாதங்க ளுக்கு முன்பிருந்த விலை யில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகின்றன.

கடந்த வாரங்களில் 12 ரூபாய் வரைக் குறைந்து சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ. 74.41-க்கும், டீசல் 70.09-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments