Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: உச்ச நீதிமன்றம்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (16:44 IST)
மத்திய அரசும், மாநில அரசுகளும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.


 

 
பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. 
 
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் மற்றும் நீதிபதிகள் ஆர்.பானுமதி, யு.யு.லலித் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
 
தற்போது பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசி பரிசீலிக்க வேண்டும்.
 
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் முக்கிய உணவு பால். அதில் செயற்கை பால் பவுடர், ராசாயனம் போன்றவை கலந்து விற்பனை செய்வது உயிர் மற்றும் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
 
எனவே பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக வேண்டும். 
 
கலப்படம் செய்யப்பட்ட பால் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மத்திய அரசு நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்ய வேண்டும். பால் கலப்படத்தை எளிதில் கண்டறியும் வழி முறைகளையும் மக்களுக்கு செல்லிக் கொடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments