Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஆபாச வீடியோ காட்டி பலாத்காரம் செய்து கொன்றேன்’ கைதியின் வாக்குமூலம்

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (18:28 IST)
இந்தியாவில் பிரபல வாசனை திரவியம் தயாரிப்பாளராக இருந்தவர் மோனிகா குர்தே (39).


 
 
கோவாவில் உள்ள அவரது வீட்டில், கடந்த 5 ஆம் தேதி கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.
 
இதை அடுத்து, மோனிகா வீட்டின் முன்னாள் காவலாளியாக இருந்த பஞ்சாபை சேர்ந்த ராஜ்குமார் சிங் (21) என்பவரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர். 
 
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோனிகாவை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து கோவா டி.ஐ.ஜி கூறியதாவது, "ராஜ்குமார் சிங் மோனிகாவிடம் அதிக பணம் கேட்டு மிரட்டி உள்ளார். மோனிகா பர்சில் 4 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது, ராஜ்குமாருக்கு அது போதவில்லை எனவே மோனிகாவின் ஏடிஎம் கார்டை எடுத்து பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி உள்ளார்.

பின்னர் ஆபாச வீடியோக்களை காட்டி மோனிகாவை வலுகட்டாயமாக பார்க்க வைத்துள்ளார். பின்னர் ராஜ்குமார் சிங் மோனிகா சிங்கை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். ராஜ்குமாருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிவிட்டோம்.  தடய அறிவியலுக்கும், டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!

கிளாம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது..!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் செல்லும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியது..!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்.. அரசாணை வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்