Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரியால் மக்கள் மகிழ்ச்சி; பிரதமர் மோடியின் வானொலி உரை

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (15:28 IST)
ஜிஎஸ்டி வரியால பொருட்களின் விலை குறைந்துள்ளது என பொதுமக்கள் பாராட்டி தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்பி வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


 

 
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். இன்று அவர் வெள்ளம் மற்றும் ஜிஎஸ்டி குறித்து உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:-
 
இம்முறை பருவ மழை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். 
 
நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து ஒருமாதம் ஆகிறது. ஜிஎஸ்டி தொடர்பாக அதிகமான பதில்கள் பெறப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டியை பாராட்டி தொடர்ச்சியாக பொதுமக்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். அன்றாட பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பது தொடர்பாக ஏழை ஒருவர் எழுதிய கடிதத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments