Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு நிறைவு!

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (13:04 IST)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆந்திராவில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை இறுதி செய்துள்ளது 
 
ஆந்திர பிரதேசத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து கூட்டணி தொகுதி பங்கீடு செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 
 
மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதியில் மூன்று மக்களவைத் தொகுதியில் ஜனசேனா கட்சியும் 22 மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசமும் போட்டியிடும். அதேபோல் 175 சட்டப்பேரவை தொகுதியில் 25 சட்டப்பேரவை தொகுதிகள் ஜனசேனா கட்சிக்கும் 150 சட்டப்பேரவை தொகுதிகள் தெலுங்கு தேசம் கட்சிக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது 
 
இது குறித்த ஒப்பந்தத்தில் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments