Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாயத்துத் தலைவர் வாய் தகராறில் அடித்துக் கொலை

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (15:35 IST)
ஜார்கண்டில் வாய்த்தகராறின் காரணமாக மாணவர் சங்கத் தலைவர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
 

 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகார் மாவட்டத்தின் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இருந்தவர் முகேஷ் குமார் சிங். இவர், கத்காடி பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வந்தார்.
 
இவர் செவ்வாயன்று அதிகாலை தியோகர் மாவட்டத்தின் ரோஹினி கிராமத்திற்கு, தனது காரில் சென்றுள்ளார். அக்கிராமத்தில் இரவு நேரத்தில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், கிராமவாசிகள் இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது, அக்கிராமத்தின் வழியே வந்த மகேஷ் குமாரின் காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனால், மகேஷ் குமாருக்கும், கிராமவாசிகளுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
 
தகராறு முற்றியதில், மகேஷ் குமார் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments