Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன் : சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எஃப் வீரர்கள்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (14:42 IST)
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று ஊடுருவியதை அடுத்து அந்த ட்ரோன் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவுவதும் அவர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடி நடவடிக்கை எடுத்து வருவதுமான செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று திடீரென ஊடுருவியதாகவும் இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இதனை அடுத்து அந்த ட்ரோன்  குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ட்ரோன் ஊடுருவிய பகுதியைச் சுற்றி பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
பாகிஸ்தான் ட்ரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments