Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காத பாகிஸ்தான்! அடக்குமா இந்தியா? எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (13:02 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

 
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் இறங்கியுள்ளது.
 
அக்னூர் மாவட்டத்தில் பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் பகுதிகளை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 
 
அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.
 
செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது இது 5-வது முறையாகும். கடந்த 36 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது என ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன்தீப் சிங் கூறினார்.

தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்...

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments