Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (12:33 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்லன்வல்லா என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
 
நேற்று இரவு 10:10 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கி சண்டை சுமார் 5 மணி நேரம் நீடித்துள்ளது. இந்திய ராணுவ தரப்பில் எந்த ஒரு சேதமும் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் விதமாக இருதரப்பு போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது என்று ராணுவம் மற்றும் உளவுத்துறை கூறியுள்ளது.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments