Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டேல் சமுகப் போராட்டம் நாடு முழுமைக்கும் பரவும்: ஹார்திக் படேல் அதிரடி தகவல்

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (02:40 IST)
27 கோடி பட்டேல் சமுகத்தினரை  ஒருங்கிணைத்து, இந்தியா முழுமைக்கும் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று படேல் சமூக ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

\
இது குறித்து, டெல்லியில், படேல் சமுக ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இட ஒதுக்கீடு கேட்டு நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளது. இதனால் இந்த போராட்டம் நிச்சயம் வெல்லும். இந்த போராட்டம் மாரத்தான் ஓட்டம் போன்றதால், இது முடிவடைய சுமார் 2 ஆண்டுகள்  வரை கூட ஆகலாம்.
 
இதற்காக, பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 27 கோடி பேரை ஒருங்கிணைத்து வருகின்றோம். மேலும், இந்த போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த உள்ளோம்.
 
ஜாதிவாரி இடஒதுக்கீடு அளிப்பதால், இந்தியா 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. இதுவே, இந்தியா வல்லரசாவும் தடையாக உள்ளது.
 
இந்தியாவில் உள்ள மொத்தம் 182 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில் 4 அல்லது 5 ஜாதிகள் மட்டுமே குஜராத்தில் உள்ளன. மீதி, அனைத்து சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments