Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உம்மன் சாண்டி நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் உத்தரவு

Webdunia
புதன், 13 ஜனவரி 2016 (23:11 IST)
கேரளாவில், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஜனவரி 25 ஆம் தேதி அந்த  மாநில முதல்வர் உம்மன்சாண்டி நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
 

 
கேரளாவில், சோலார் பேனல் மோசடி புகார் தொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரத்தில் முதல்வர் உம்மன்சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறினர். மேலும் சரிதா நாயரின் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்த போது, இதில், முதல்வர் உம்மன் சாண்டிக்கும் பங்கு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்த நிலையில், முதல்வர் உம்மன் சாண்டியும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக வேண்டும் என்று விசாரணை கமிஷன் நீதிபதி சிவராஜ் உத்தரவிட்டுள்ளார். 

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி

Show comments