Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளூர் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (04:41 IST)
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வெங்காய விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து  வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
 

 
இந்தியாவில் பருவம் தவறி மழை பெய்து வருவதால், பல மாநிலங்களில் வெங்காய உற்பத்தி இல்லாமல் போனது. இதன் காரணமாக, இந்திய சந்தைகளில் வெங்காய விலை மிகவும் உச்சத்திற்கு சென்றது. ஒரு கிலோ வெங்காயம் சுமார் 70 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து, வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக களத்தில் குதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுமார் 18,000 டன் வெங்காயம் எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு  இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், கடந்த 2014-15 ஆம் ஆண்டில் எகிப்தில் இருந்து 567 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில், சுமார் 35,000 டன்கள் உச்சத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments