Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி - கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:22 IST)
கேரளாவில் கனமழை பெய்து வருவதனால் இந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 
 
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவான ஓணம் பண்டிகையை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments