Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2015 (10:59 IST)
நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அம்மாநில அமைச்சர் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

 
நேற்று இந்திய தேசத்தின் 59ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதே போன்று, நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் அரங்கத்திலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
 
அவ்விழாவில், மாநில சிறப்பு விருந்தினராக அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதிஹா கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். அப்போது, அவர் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவில், தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை கவனிக்காமல் இருந்துள்ளனர்.
 
பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்குப்பின், இந்த தவறை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்தனர். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மந்திரி பிக்ராம் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments