Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிண்டேவை கனத்த இதயத்துடன் முதல்வராக்கினோம்… மாநில பாஜக தலைவர்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (13:41 IST)
மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று கனத்த இதயத்துடன் கட்சி முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.


மும்பை அருகே உள்ள பன்வேலில் நடந்த மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியான பாஜக, ஜூன் 30 அன்று சிவசேனாவை பிளவுபடுத்தி உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்த ஷிண்டே முதலமைச்சராக வேண்டும் என்று அறிவித்த போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மத்திய தலைமையும் தேவேந்திராவும், ஏக்நாத் ஷிண்டேவை கனத்த இதயத்துடன் முதலமைச்சராக ஆதரிக்க முடிவு செய்தனர். நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் முடிவை ஏற்க முடிவு செய்தோம் என கூறியுள்ளார்.

ஷிண்டே தலைமையிலான 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் குழுவின் கிளர்ச்சியால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த பிறகு, ஃபட்னாவிஸ் முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஷிண்டே புதிய அரசாங்கத்தை வழி நடத்துவார் என்று ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

முன்னாள் முதலமைச்சரான ஃபட்னாவிஸும் அரசாங்கத்திற்கு வெளியே இருப்பேன் என்று கூறினார். ஆனால் இரண்டு மணி நேரத்தில், பாஜக தலைவர் ஜே பி நட்டா, ஃபட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்பார் என்று அறிவித்தார்.

இதற்கிடையில், பாட்டீலின் கருத்துகள் குறித்து கேட்ட போது, மாநில பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலார் செய்தியாளர்களிடம், இது கட்சியின் அல்லது பாட்டீலின் சொந்த நிலைப்பாடு அல்ல. ஆனால் அவர் சாதாரண தொழிலாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments